முப்பெரும் தேவிகளின் அரங்கேற்றம்

bharatanatyam_arangetram

முப்பெரும் தேவிகளின் அரங்கேற்றம்



நங்கநல்லூர் கிளை RASA A.R.P.I.T.A நடனபள்ளியின் நிறுவனர் டாக்டர் நித்யகல்யாணியின் மூன்று மாணவிகளான நேஹா ராமசுவாமிசம்யுக்தா சுப்ரமணியன் மற்றும் ஷ்ரேயா வெங்கட்ராமனின் பரத நாட்டிய அரங்கேற்றம்  ரசிக ரஞ்ஜனி சபாவில் சிறப்பாக நடைபெற்றது. 


 இவரது குரு ரஸ  அர்பிதா நிறுவனர் கலைமாமணி டாக்டர் அம்பிகா காமேஸ்வரன் ஆசிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ ஸ்ரீமதி சித்ரா விஸ்வேஸ்வரன், கலைமாமணி ஸ்ரீமதி ப்ரியா முரளி, மற்றும் ஸ்ரீமதி மாலா பரத் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி, மாணவிகளுக்கு சான்றிதழ் அளித்து பாராட்டினார்கள்.  


மூன்று மாணவிகளும் மிகச் சிறப்பாக ஆடி குருவிற்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்தார்கள் என்கிறார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாட்டும் பரதமும் இதழின் ஆசிரியர் ராம்கி.