செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 குழந்தைகள்

Children-rescued

திருவள்ளூர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 குழந்தைகள் சேவாலயா தொண்டு  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

 திருவள்ளூர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் 2வது நடைமேடையில் 2 குழந்தைகள், ஒன்றரை வயது பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தை தனியாக கதறி அழுது கொண்டிருப்பதாக திருவள்ளூர் ரயில்வே இருப்பு கோட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் 2 குழந்தைகளை மீட்டு அவர்களின் பெற்றோர் யார் என விசாரணை நடத்தினர்.




இதையடுத்து, ரவிச்சந்திரன், ரிசர்வ் லைன் காவல் உதவி ஆய்வாளர், பொற்செல்வி, காவலர், மற்றும் தினேஷ்குமார், காவலர் ஆகியோர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்துக்குச் சென்று 2 குழந்தைகளையும் மீட்டனர். குழந்தைகள் பற்றிய தகவல் தெரியவில்லை. அதே சமயம், குழந்தைகளை கவனக்குறைவாக கைவிடப்பட்டதா அல்லது வேண்டுமென்றே ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனரா என, ரிசர்வ் லைன் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். குழந்தைகள் காணாமல் போனதாக புகார் எதுவும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். எனவே மீட்கப்பட்ட 2 குழந்தைகளும் திருநின்றவூர் கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.