தமிழ்நாட்டில்‌ ஊரடங்கு சில தளர்வுகளுடன்‌ மேலும்‌ ஒருவாரம்‌ நீட்டிப்பு

lockdown Tamil Nadu

தமிழ்நாட்டில்‌ ஊரடங்கு சில தளர்வுகளுடன்‌ மேலும்‌ ஒருவாரம்‌ நீட்டிப்பு –  தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவிப்பு.

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக, இந்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25-3-2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌
சட்டத்தின்‌ கீழ்‌, ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன்‌ அமலில்‌ ஒருந்து வருகிறது.

இந்திய அரசின்‌ உள்துறை அமைச்சகத்தால்‌ 27-5-2021 அன்று (பவெளியிடப்பட்டு்ள்ள ஆணையில்‌, கொரோனா நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ 30-6-2021 வரை தொடர்ந்து அமலில்‌ இருக்கும்‌ என ஆணையிடப்பட்டுள்ளது. மேலும்‌, நோய்த்‌
தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ பொருட்டு, அனைத்துக்‌ கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்‌, மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுடன்‌ நடத்தப்பட்ட ஆலோசனையின்‌ போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்‌ அடிப்படையில்‌, கொரோனா பெருந்தொற்று நோய்ப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த கடந்த 24-5-2021 முதல்‌ தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும்‌ 07-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும்‌ நிலையில்‌, நோய்த்‌ தொற்றின்‌ தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்‌, நோய்த்‌ தொற்று பரவாமல்‌ தடுத்து, மக்களின்‌ விலைமதிப்பற்ற உயிர்களைக்‌ காக்கும்‌ நோக்கத்திலும்‌, இந்த முழு ஊரடங்கு 7-6-2021 முதல்‌ 14-6-2021 காலை 6-00 மணி வரை, சில தளர்வுகளுடன்‌ மேலும்‌ ஒரு வார காலத்திற்கு நீட்டிப்புசெய்து உத்தரவிட்டுள்ளேன்‌.

இந்த ஊரடங்கின்‌ போது, அனைத்து மாவட்டங்களிலும்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

தமிழ்‌ நாட்டில்‌ தற்போது கொரோனா நோய்த்‌ தொற்று பரவலாக பல மாவட்டங்களில்‌ கட்டுக்குள்‌ வந்துள்ள போதிலும்‌ கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ மட்டும்‌ நோய்த்‌ தொற்றுப்‌ பரவல்‌ தொடர்ந்து

அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே, ஒம்மாவட்டங்களில்‌ நோய்த்தொற்று பரவலைக்‌ கட்டுக்குள்‌ கொண்டுவரும்‌ வகையிலும்‌ அதே சமயம்‌ பொதுமக்களின்‌ அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கத்துடன்‌ தற்போது ஏற்கனவே
அனணுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்‌, மேற்காணும்‌ 11 மாவட்டங்களில்‌ கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ கட்டுப்பாடுகளுடன்‌ 7-6-2021 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

*தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை ௧5.0௦ மணி
வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.0௦ மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*மீன்‌ சந்தைகள்‌ மொத்த விற்பனைக்காக மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. மீன்‌ சந்தைகளில்‌ சமூக இடைடுவளியை கடைப்பிடிக்கும்‌ பொருட்டு, ஒன்றுக்கும்‌மேற்பட்ட இடங்களில்‌ திறந்த வெளியில்‌ ஒந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள்‌ உடனடியாக செய்ய வேண்டும்‌.

*இறைச்சிக்‌ கூடங்கள்‌ மொத்த விற்பனைக்கு மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

*அனைத்து அரசு அலுவலகங்களும்‌, 30 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ ஒரு நாளைக்கு 5௦ சதவிகிதம்‌ டோக்கன்கள்‌ மட்டும்‌ வழங்கப்பட்டு, பத்திரப்‌ பதிவுகள்‌ மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

*தீப்பெட்டி தொழிற்சாலைகள்‌ 5௦ சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி (செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத்‌ தவிர இதர மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, ஏற்கனவே அணனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்‌ கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படும்‌.

*தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை ௧5.0௦ மணி
வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.




*காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*மீன்‌ சந்தைகள்‌ மொத்த விற்பனைக்காக மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. மீன்‌ சந்தைகளில்‌ சமூக இடைடுவளியை கடைப்பிடிக்கும்‌ பொருட்டு, ஒன்றுக்கும்‌
மேற்பட்ட இடங்களில்‌ திறந்த வெளியில்‌ ஒந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள்‌ உடனடியாக செய்ய வேண்டும்‌.
இறைச்சிக்‌ கூடங்கள்‌ (பரா ௦05௦5) மொத்த விற்பனைக்கு மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

*தீப்பெட்டி தொழிற்சாலைகள்‌ 5௦ சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி (செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*அனைத்து அரசு அலுவலகங்களும்‌, 30 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ ஒரு நாளைக்கு 5௦ சதவிகிதம்‌ டோக்கன்கள்‌ மட்டும்‌ வழங்கப்பட்டு, பத்திரப்‌ பதிவுகள்‌ மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

*தனியார்‌ பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ அலுவலகம்‌, வீடுகள்‌ மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகளில்‌ வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்‌  e-pass-பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌.

*மின்‌ பணியாளர்‌ , பிளம்பர்கள்‌ ( கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ ,  மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.௦௦ மணி வரை ௫-பதிவுடன்‌ பணிபுரிய அனுமதிக்கப்படுவர்‌.

*மின்‌ பொருட்கள்‌ , பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மற்றும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.0௦ மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ மட்டும்‌ (விற்பனை நிலையங்கள்‌ அல்ல) காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை
செயல்பட அனுமதிக்கப்படும்‌.




*ஹார்டுவேர்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.0௦ மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌. வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌
கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.0௦ மணி வரை செயல்பட அனுமதிக்கப்டுூம்‌.

*கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.௦௦ மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*வாகன விநியோகப்பாளர்களின்‌ வாகன பழுதுபார்க்கும்‌ மையங்கள்‌ மட்டும்‌ (விற்பனை நிலையங்கள்‌ அல்ல) காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ-பதிவுடன்‌ செல்ல அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, வாடகை டேக்ஸிகளில்‌, ஓட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஓட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க
அனுமதிக்கப்படும்‌.

பொது

நீலகிரி மாவட்டம்‌, கொடக்கானல்‌, ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம்‌ பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து
-பாஸ்‌ பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

*கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, சேலம்‌, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, திருச்சிராப்பள்ளி மற்றும்‌ மதுரை மாவட்டங்களில்‌ உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌, ஏற்றுமதி
ஆணைகள்‌ வைத்திருப்பின்‌, ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும்‌, மாதிரிகள்‌ அனுப்புவதற்காக மட்டும்‌, 10 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு
நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

*தமிழக அரசால்‌ அறிமுகப்படுத்தப்பட்டூுள்ள நடமாடூம்‌ வாகனங்கள்‌ மூலம்‌ பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள்‌ ஆகியவை விற்பனை செய்யும்‌ திட்டம்‌, பொது மக்களின்‌ வரவேற்பை பெற்றுள்ள நிலையில்‌, இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்‌.