உலக பால்‌ தினம்‌

WORLD-MILK-DAY-TN

உலக பால்‌ தினம்‌

உலக பால்‌ தினம்‌, உலகம்‌ முழுவதும்‌ 2001ஆம்‌ ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள்‌ சபையின்‌ உணவு மற்றும்‌ வேளாண்மை அமைப்பு (0) பாலின்‌ முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்‌ பொருட்டு 2001ஆம்‌ முதல்‌ ஆண்டுதோறும்‌ ஜீன்‌ 1ஆம்‌ தேதி உலக பால்‌ தினமாக அறிவித்தது. தமிழகத்தில்‌ பால்‌ கொள்முதல்‌ மற்றும்‌ விற்பனையில்‌ ஆவின்‌ நிறுவனம்‌ பெரும்‌ பங்கு வகிக்கிறது. ஆவின்‌ நிறுவனத்தால்‌ உலக பால்‌ தினம்‌ இன்று ஆவின்‌ தலைமை அலுவலகத்தில்‌ சிறப்பாக கொண்டாடப்பட்டது.

WORLD-MILK-DAY
WORLD-MILK-DAY

உலக பால்‌ தின கொண்டாட்டத்தின்‌ குறிக்கோள்கள்‌:

* தனி மனித வாழ்க்கையில்‌ பாலின்‌ முக்கியத்துவம்‌ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்‌.




* பால்‌ மற்றும்‌ பால்‌ பொருட்கள்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தக்க நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளுதல்‌.

* மக்களின்‌ அன்றாட வாழ்வின்‌ பொருளாதாரம்‌ மற்றும தொழில்‌ வளர்ச்சியில்‌ பாலின்‌ பங்களிப்பை உணர்த்துதல்‌.

* பாலில்‌ உள்ள கால்சியம்‌, புரதம்‌, பொட்டாசியம்‌ மற்றும்‌ வைட்டமின்‌ பி2 ஆகிய ஊட்டச்சத்துகளின்‌ நன்மைகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்‌.

* பொது மக்களிடையே பால்‌ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விளம்பர உத்திகள்‌ பயன்படுத்துதல்‌.




ஆவின்‌ பால்‌ கொள்முதல்‌:-

ஆவின்‌ நிறுவனம்‌ தற்பொழுது மாநிலம்‌ முழுவதும்‌ பால்‌ உற்பத்தியாளர்களிடமிருந்து
சுமார்‌ 36 லட்சம்‌ லிட்டர்‌ தினம்தோறும்‌ கொள்முதல்‌ செய்து வந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு, சில தனியார்‌ பால்‌ நிறுவனங்கள்‌ கொள்முதலை நிறுத்திய நிலையில்‌, விவசாய பெருமக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டு, இப்பேரிடர்‌ காலத்திலும்‌ பால்‌ உற்பத்தியாளர்கள்‌ எவ்வித பாதிப்புகளுக்கும்‌ உள்ளாகதவகையில்‌ அவர்களிடமிருந்து மொத்தப்பாலையும்‌ ஆவின்‌ நிர்வாகம்‌ கொள்முதல்‌ செய்கிறது. எனவே தற்போது நாளொன்றுக்கு சுமார்‌ 4.00 லட்சம்‌ லிட்டர்‌ பால்‌ கொள்முதல்‌ அதிகரித்து சுமார்‌ 40 லட்சம்‌ வரை நாளொன்றுக்கு பால்‌ உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல்‌ செய்யப்படுகிறது.

ஆவின்‌ பால்‌ விற்பனை:-

சென்னை மற்றும்‌ பிற மாவட்டங்களில்‌ தினசரி பால்‌ விற்பனை சுமார்‌ 24 லட்சம்‌ லிட்டர்‌ வரை இருந்தது, தற்போது விலைக்குறைப்பிற்கு பின்னர்‌ சுமார்‌ 26 லட்சம்‌ லிட்டர்‌ வரை விற்பனை உயர்ந்துள்ளது. மேலும்‌ புதிய சாதனையாக சென்னையில்‌ 23.05.2021 அன்று 15.04 லட்சம்‌ லிட்டர்‌ மற்றும்‌ பிற மாவட்டங்களில்‌ 22.05.2021 அன்று 12.59 லட்சம்‌ லிட்டர்‌ விற்பனை செய்யப்பட்டது.




இந்த நெருக்கடியான சூழ்நிலையில்‌ பொது மக்களுக்கு எவ்வித சிரமுமின்றி பால்‌ மற்றும்‌ பால்‌ உபபொருட்கள்‌ கிடைக்க, ஆவின்‌ பாலகங்களின்‌ மூலம்‌ நுகர்வோர்‌ இல்லங்களுக்கு பால்‌ மற்றும்‌ பால்‌ உபபொருட்கள்‌ விநியோகம்‌ செய்வதற்காக ZOMOTO மற்றும்‌ DUNZO) நிறுவனங்களுடன்‌ ஆவின்‌ நிறுவனமும்‌ இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம்‌ செய்யப்பட்டுள்ளது. இதன்‌ மூலம்‌ தினம்‌ தோறும்‌ 700 க்கும்‌ மேற்பட்ட ஆர்டர்கள்‌ நுகர்வோர்கள்‌ மூலம்‌ பெறப்பட்டு ரூபாய்‌ மூன்று இலட்சம்‌ மதிப்புள்ள பால்‌ உபபொருட்கள்‌ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

WORLD-MILK-DAY
WORLD-MILK-DAY

உலக பால்‌ தினத்தை முன்னிட்டு ஆவின்‌ சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ சிறப்பாக செயல்பட்ட பால்‌ உற்பத்தியாளர்கள்‌, பால்‌ நுகர்வோர்‌ கூட்டுறவு சங்கம்‌, மொத்த பால்‌ மற்றும்‌ பால்‌ உபபொருட்கள்‌ விற்பனையாளர்கள்‌, சில்லறை விற்பனையாளர்கள்‌, பால்‌ அட்டை நுகர்வோர்கள்‌ மற்றும்‌ நுகர்வோர்களுக்கு பரிசுகள்‌
மற்றும்‌ பாராட்டு சான்றிதழ்களை மாண்புமிகு பால்வளம்‌ மற்றும்‌ பால்‌ பண்ணை வளர்ச்சி துறை அமைச்சர்‌ உயர்‌ திரு. சா.மு. நாசர்‌, அவர்கள்‌ மற்றும்‌ ஆவின்‌ மேலாண்மை இயக்குநர்‌ முனைவர்‌. இரா.நந்தகோபால்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ வழங்கி
சிறப்பித்தனர்‌. உடன்‌ ஆவின்‌ உயரதிகாரிகள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து
கொண்டனர்‌.