ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வெள்ளி கவசம்

anjaneya-swamy

ஸ்ரீ பைரவ சாயீ திருகோயில் அறக்கட்டளைஎண் 6 – பாரத் நகர் மெயின், மடிப்பாக்கம், சென்னை 600 091. போன் 22476833. 91765 66648 & 94459 00072 (கூட்டுரோடு,அருகில்)

ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வெள்ளி கவசம்

பைரவ சாயி ஆலயத்தில் அருள் தரும் ஶ்ரீ ஆபத்சகாய யோக ஆஞ்சநேய ஸ்வாமிக்கு,  அனைத்து  பக்த கோடிகளின் வேண்டுதலுக்கு இணங்க ஆஞ்சனேய ஸ்வாமியின் உத்தரவு பெற்று, ஸ்வாமியின் ஆசியுடன் வெள்ளியினால் ஆன அங்கி (வெள்ளிக்கவசம்)  செய்ய உள்ளோம்..நிர்வாகம் அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளது . இவ் வெள்ளிக்கவசம் செய்ய சிலவு  Rs 15 லக்‌ஷ்ம் ஆகும் என எதிர்பார்க்கிறோம்.




ராமயணத்தில், ஶ்ரீராமன் சமுத்திரத்தை கடந்து செல்ல வாயுபுத்திரர் அனைவரும் தங்கள் பங்கிற்க்கு தங்களால் இயன்ற உதவியாக சிறு சிறு பணிகளை செய்து, பாலம் உருவாக்கி ஶ்ரீ ராமச்ந்திர மூர்த்திக்கு உதவியது போல, வாயுபுத்திரசேனை தலைவன் ஶ்ரீ ஆபத் சகாய யோக ஆஞசனேயர்க்கு வெள்ளி கவசம் செய்ய தங்களால் ஆன சிறு சிறு காணிக்கை  யை அளித்து ஶ்ரீ ஆஞ்சனேய ஸ்வாமியின் பரிபூர்ன ஆசிக்கு பாத்திரர் ஆகும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

காணிக்கைகளை நேரிலோ அல்லது online மூலமாக கீழ்க்காணும் அக்கவுண்ட்டில் செலுத்தலாம்.

Shri Bhairava Sai Temple Trust

Account No : 151001000304675 :

 IFSCCode : CIUB0000151

CITY UNION BANK – Madipakkam Branch _________________________________________________________




பிரார்த்தனை நிறைவேற 1008 முறை  ஸ்ரீ சாய் நாமம் எழுதும் புத்தகம்

shri-bhairava sai temple
shri-bhairava sai temple

1008 முறை ஓம்சாய்ராம்  என்ற ஸ்ரீ  சாய் நாமம் எழுதும் புத்தகத்தை நமது ஸ்ரீ பைரவ சாய் திருக்கோவிலில் பிரசுரித்துள்ளார்கள்.  இப் புத்தகத்தை  எல்லோரும் பெற்றுக்கொண்டு,  ஒரு வியாழக்கிழமை  காலை ஸ்ரீ சாய் பாபாவை வேண்டிக்கொண்டு 1008 முறை ஓம் சாய்ராம் என எழுத ஆரம்பிக்கவேண்டும். அவ்வாறு எழுதும்போது ஸ்ரீ சாய் நாமத்தை ஜபம் செய்துக்கொண்டு எழுதவேண்டும். இதனை 8 நாட்களில் பூர்த்தி செய்யலாம்.  பூர்த்தி செய்த புத்தகங்களை நமது ஸ்ரீ பைரவ சாய் திருக்கோவிலில் சமர்ப்பித்தால் அவர்கள்  தங்களது பிரார்த்தனை நிறைவேற இப் புனித புத்தகங்களை ஷிரிடிக்கு அனுப்பி   ஸ்ரீ சாய்நாதரின்  திருவடிகளில்   சமர்ப்பிப்பார்கள்.




இதனால் கிடைக்கும் பலன் :  நினைத்தது நடக்கும்.  பேராசையுடைய காரியங்கள் நிறைவேறாது. கல்யாணம் நடக்க, குழந்தை பாக்கியம் பெற, மனக்கவலை தீர, வியாதிகள் தீர, வேறு எந்த ஒரு காரியம் நடைபெறவும் பாபாவை நினைத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கவும், நியாயமாக நினைத்த காரியம் நிறைவேறும். கிடைசி நாள் ஸ்ரீ சாய்பாபா கோவிலுக்கு சென்று ஒன்பது நபர்களுக்கு ஸ்ரீ சாய் நாமம் எழுதும் புத்தகத்தை விநியோகம் செய்து அவரவர் சக்திக்கேற்ப்ப அன்னதானம் செய்வது உத்தமம்.

மேலும் விவரங்களுக்கு 91765 66648 அல்லது 94459 00072, 044-22476833 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.